கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தாலுக்கா திவான்சாபுதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தமிழக கேரளா எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக கேரளா நெடுஞ்சாலையில் புதிதாக தனியார் மதுபான கூடம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான கூட்டத்தால் நாள்தோறும் பொதுமக்களும், மாணவர்களும், நோயாளிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு அருகில் இரண்டு மருத்துவமனைகளும் ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது எனவே புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மதுபான கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி நாடார் நல சங்கத்தின் சார்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியரிடமும் ஆனைமலை தாலுக்கா வட்டாட்சியர் அவர்களிடமும் வால்பாறை உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடமும் இது குறித்து மனு கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவின் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தக் கடையால் பொதுமக்கள் மாணவர்கள் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது நிதர்சனம்.
இந்நிலையில் தனியார் மதுபானக்கூடத்தை அகற்றக்கோரி நாளை 24-09-2024 செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில நாடார் நலச்சங்க இணைச் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நலனுக்காக பாகுபாடின்றி அனைத்து சமுதாய பொதுமக்களும்
கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.