தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வாலசமுத்திரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் வாலசமுத்திரத்தில் வட்டாட்சியர் ஆனந்த் முன்னிலையில் வடகிழக்கு மழையை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை பயிற்சியை நடத்தினர். அப்போது வடகிழக்கு பருவமழை மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை எவ்வாறு சமாளிப்பது மற்றும் மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கிராம மக்களுக்கு ஒத்திகை பயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் தீயணைப்பு மீட்புப் பணி சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஜோசப் காகு,ஒட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் , RI செல்வ லட்சுமி, VAO ரமேஷ், பஞ்சாயத்து தலைவி மகேஷ்வரி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.