வண்டல் மண் என்ற பெயரில் சரள் மண் கொள்ளை என பொது மக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு – கோவில்பட்டி அருகே வாகனங்களை சிறைப்பிடித்து பொது மக்கள் போராட்டம் – பரபரப்பு….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைகுடியில் 96 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாய் பகுதியில் இன்று சிலர் கனரக வாகனங்களை வைத்து சரள் மண் எடுத்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை சிறை பிடித்து, சரள் மண் எடுப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றுள்ளீர்கள், அதற்கான அனுமதி சீட் எங்கே என்று கேள்வி கேட்டதும், அங்கிருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல் கூறியதை தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையம் மற்றும் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து சரள் மண் அள்ளியவர்கள் வாகனங்களை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை நம்பி 200 ஏக்கர் அளவில் விவசாயம் செய்து வந்தோம், நெல் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வந்த நிலையில் தொடர்ந்து கண்மாயில் சரள் எடுப்பதால் நீர் வரத்து தடைப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியவில்லை என்றும், தற்பொழுது 40 ஏக்கர் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறிவிட்டு சரள் எடுத்து வருவதாகவும், இதனால் தங்களது பகுதியில் மேலும் விவசாயம் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விவசாயிகள் பயன்பெறுவதற்காக தமிழக அரசு கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதித்துள்ள நிலையில் சிலர் அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி சரள் மண் அள்ளி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி கொடுப்பது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவு அள்ளப்படுகிறதா, வண்டல் மண் தவிர வேறு எதுவும் கனிமவளங்கள் சுரண்டப்படுகிறதா என்பதனை பல இடங்களில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp