கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு கண்ணார்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் குழந்தைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஊராட்சி தலைவர் ஞானசேரகன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்று வருகிறார்.
இதேபோல் இந்தாண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை தேர்வு செய்து கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார். சென்னையில் காலை உணவுக்கு பின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அண்ணா நூலகத்திற்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் ஞானசேகரன் பேசுகையில்: ஏழ்மை நிலை மாணவர்களின் கனவை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். வசதி படைத்த நபர்கள், அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்: சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீரூடை, நோட்டு, புத்தகங்கள் வழங்குகிறார். விமானத்தில் செல்ல வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். பள்ளியில் படிக்கும் இவர்களை 4வது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் என கூறினார்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்: விமானத்தில் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துள்ளோம். நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.