வெள்ளலூர் குடியிருப்பில் தண்ணீர் வராததால் மக்கள் சாலை மறியல்!!

கோவை மாவட்டம் போத்தனூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடிக்கடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. குடிசை மாற்று வாரியத்துக்கு உட்பட்ட குடியிருப்புகள் சுமார் 1600 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி சரியான பராமரிப்பு இல்லாததால் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது ஒரு புறம் இருக்க அன்றாடம் தேவைப்படும் தண்ணீர் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதை கண்காணிக்க குடிசை மாற்று வாரியம் குழு ஒன்றை அமைத்துள்ளது. நான்கு நபர்களை நியமனம் செய்து தண்ணீர் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் வீட்டுக்கு 100 ரூபாய் என்று பெறப்பட்டு வந்தது.

திடீரென வீட்டுக்கு 250 ரூபாய் வீதம் கேட்பதாலும் தனிப்பட்ட நபர்கள் இதில் தலையிட்டு தண்ணீர் தருவதை தடுப்பதாகவும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். 36 வீடு கொண்ட ஒரு குடியிருப்பில் ஒருவர் நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கின்றனர்.

இதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட ஏ இ. ஏ டி போன்றவர்கள் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஆய்வுக்கு வரவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். மக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்குள்ள மக்களை போத்தனூர் ஆய்வாளர் வேல்முருகன் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலந்து செல்லுமாறு கூறினர். சிறிது நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டதால் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தலைமை நிருபர்,

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp