116 ஜோடிகள் கலந்து கொண்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!! சீறிப்பாய்ந்த மாடுகள்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விளாத்திகுளம் விஸ்வகர்மா மக்கள் சார்பாக திரை உலகை முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா
ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.

இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் எங்கே பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, போடி, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 116 ஆவது ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எங்கே பந்தயத்தில் மாடு வண்டிகள் ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி செல்லும் காட்சிகளை சாலையில் இருபுறமும் நெடுதூரம் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிகப்படியாக 65 முதல் 70 ஜோடி மட்டுமே இதுவரை போட்டியில் கலந்து கொண்டன. ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் 116 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தனர் என்று மாட்டுவண்ட பந்தைய சங்கத்தினர் கூறினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் குமரட்டியாபுரம் பாலகுரு குருராஜ் ஏற்பாடு செய்திருந்த என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,

-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp