கோவை மாவட்டம் வால்பாறை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக இன்று 21.10.2024 பிறந்த நாள் விழா காணும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரும் வி.செந்தில்பாலாஜி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை 7.00 மணிக்கு வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவாக அசைவ உணவும், மற்றும் இனிப்புகள் வழங்கியும் மேலும் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சரின் பெயரில் பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதை தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் திரு.ரமேஷ்ராஜ், திரு.ரவிச்சந்திரன் ( 15-வது கவுன்சிலர் ) ஆகியோர் தலைமை வகித்தனர். உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக திரு.சதீஷ்குமார் ( தலைவர் ), திரு.சிவா இளங்கோமணி ( செயலாளர் ), திரு.காளிதாஸ் ( பொருளாளர் ), திரு.மகேந்திரன் ( துணைத்தலைவர் ), திரு.முரளி ( துணைத்தலைவர் ), திரு.தேவராஜ் ( துணைத்தலைவர் ), திரு.பாண்டி ( நகர துணைச்செயலாளர் ), திரு.மீசைக்குமார் ( கௌரவத் தலைவர் ) ஆகியோர் முன்னிலை வகித்து வால்பாறையில் அமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா சீரும் சிறப்புமாக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்முகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ உளமாற வாழ்த்தினார்கள்.
மேலும் இது தொடர்பாக நாமும் நேரடியாக பார்க்கும் பொழுது கடும் மழையிலும் அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளையும் இணைப்புகளையும் வழங்கியது வரவேற்கத்தக்கது அவர்கள் அனைவரும் அமைச்சரை வாழ்த்தியது அப்பகுதியில் பெரும் எதிர்பார்த்து ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம் வால்பாறை.