புரோட்டாவிற்கு சால்னா எங்க? கோவை உக்கடம் பிரபல பிரியாணி உணவக உரிமையாளருக்கு கத்தி குத்து!! இருவர் கைது!!!

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தனியார் உணவகங்கள் அதிக அளவு செயல்பட்டு வருகின்றது, இந்நிலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலை பகுதியில் பல்வேறு பிரியாணி உணவகங்கள் இயங்கி வந்தாலும் அபிதா என்ற பிரியாணி கடை மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அபிதா என்ற பிரியாணி கடைக்கு சென்ற இருவர் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக கூறப்படுகின்றது. அவர்கள் தகராறில் ஈடுபடுவதை அறிந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் அவர்கள் கேட்டதை தர முயற்சி செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் அப்போது அவர்கள் இருவரும் அமானுல்லாவிடம் ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சற்றும் எதிர்பாரதவிதமாக அங்கு தகராறில் ஈடுபட்டவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார்.

அதனால் பதற்றம் அடைந்த கடையின் ஊழியர்கள் உக்கடம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர் அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உக்கடம் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பதும் தெரிய வந்தது அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படும் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp