பொள்ளாச்சி புளியங்காண்டி அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்து கன்று குட்டியை தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது குடிநீர் மற்றும் உணவு இறைத்தேடி யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள ஊருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் சுற்றி வருவது வழக்கம்.
இந்த நிலையில் ஊருக்குள் இருக்கும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்திருக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தைகள் கவ்விச் செல்வதும் அவ்வப்போது நடக்கின்றது. இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் புளியங்கண்டி அருகே சுபாஷினி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து தோட்டத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்று குட்டியை வேட்டையாட முயற்சித்துள்ளது.
அப்போது தோட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறுத்தையை அங்கிருந்து விரட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி மற்றும் தோட்டத்தில் உள்ள நாய் ஆகியவை லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியது. காயம்பட்ட விலங்கு களுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் சிறுத்தை உலா வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.