கோவை மாவட்டம் போத்தனூர்: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது அதனைத் தொடர்ந்து போத்தனூர் சாய் நகர் சாலை எஸ்பிஐ வங்கி அருகே நேற்று பெய்த மழையில் தண்ணீர் அங்கு குளம் போல் தேங்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தேங்கியிருந்த தண்ணீரை உறிஞ்சிக் குழாய் மூலம் அகற்றினர். அடிக்கடி இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தண்ணீர் தேங்காமல் வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை கவனத்தை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் வரும் நாட்களில் சாய் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் இலகுவாக போவதற்கு குழாய் பதித்து தருவதாக கூறியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.