கடந்த 2022 ஏற்கனவே சொத்து வரி ஏற்றப்பட்ட நிலையில் தற்போது 6% உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து 40 மாதகாலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ள்ளான காரணமாக தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் சொத்து வரி உயர்வினை திரும்ப பெறக் கோரியும்
திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரையின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் கே பெருமாள் ஒன்றிய செயலாளர் மகேஷ் பால்ராஜ் காந்தி காமாட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து அதிமுக நிர்வாகிகள் வரதராஜ பெருமாள் தேவேந்திரன் புதூர் கவுன்சிலர் பெருமாள்சாமி கண்ணன் வேல்முருகன் ஆனந்த் மகளிரணி பிரியா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.