கோவில் பேரில் பட்டா மாற்றுவதை கைவிட வேண்டி போராட்டம் நடைபெற்றது!!

கீழ விளாத்திகுளம் கத்தாளம்பட்டி கிராம விவசாயிகளின் நிலங்களை கோவில் பேரில் பட்டா மாற்றுவதை கைவிட வேண்டி போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளம் கத்தாழம்பட்டி கிராம விவசாயிகளின் 553.29 ஏக்கர் நிலங்களையும் விளாத்திகுளம் நகரில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட 21.17 ஏக்கர் நிலங்களையும் கோவில் பெயரில் பட்டா மாற்றும் முயற்சியை கைவிட கோரியும்,வில்வமரத்துபட்டி விவசாயிகளின் 123.51 ஏக்கர் நிலங்களை கோவில் பெயரில் மாற்றப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து விவசாயிகளூக்கே மீண்டும் பட்டா மாறுதல் செய்ய வலியுறுத்தியும்,விவசாயிகள் பெயரிலேயே நிலம் இருப்பதை உறுதி செய்ய கோரியும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர்.ராகவன், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன்,மாவட்ட துணைத் தலைவர்கள் , ஐ.கணபதி, ஏ.பாலகிருஷ்ணன், ஜி.ராமசுப்பு , துணைச் செயலாளர்கள் பி.மணி ., செல்வராஜ் விளாத்திகுளம் தாலுகா தலைவர் ஆர்.ராமலிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி, மற்றும் லட்சுமணபெருமாள், பெரியசாமி, ராமமூர்த்தி, கண்ணதாசன், பட்டாதாரி உள்ளிட்ட கீழவிளாத்திகுளம் கத்தாளம்பட்டி வில்வமரத்துப்பட்டி கிராமங்களை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp