தூத்துக்குடியில் வருகிற 9ஆம் தேதி சனிக்கிழமை வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாாக வடக்கு மாவட்டச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், : தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு வருகை தர உள்ள துணை முதலமைச்சர், கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்தும்.
இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், துணை முதலமைச்சர் – கழக இளைஞரணிச் செயலாளர் பிறந்தநாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்க தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வருகின்ற 09.11.2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. மதியழகன் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு.பிரதீப், திரு.மகேந்திரன், இராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.