விளாத்திகுளம் வட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வயல் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படும் மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்திய இடங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வயல் ஆய்வு மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஒரு பகுதியாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது பெறுவதற்காக விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர் ரெபேக்கா மார்க்கண்டேயன் வயலினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அந்த வயலில் இயற்கை வேளாண்மை இடுபொருட்களை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வரும் எலுமிச்சை கொய்யா முருங்கை மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்தார் மேலும் இயற்கை வேளாண்மை இடுபொருள்களான மண்புழு உரம் மக்கிய தொழு உரம் பஞ்சகாவிய ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களையும் தொழில் நுட்பங்களையும் ஆய்வு செய்தார்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிரில் விளம்பரத்தை பற்றி கிராமத்தில் அமைக்கப்பட்ட செயல் விளக்க திட்டங்களை ஆய்வு செய்தார் செயல் விளக்க திட்டங்கள் அமைத்த விவசாயிகளிடமும் கலந்துரையாடினார் அதனை தொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உளுந்து பயிரில் அமைக்கப்பட்ட செயல் விளக்க திட்டங்களை ஆய்வு செய்தார்
ராமச்சந்திராபுறத்தில் தமிழ்நாடு பசுமை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பில் நடப்பட்ட வேப்பமரம் கன்றுகளையும் கன்றுகளுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயம் மிளகாய் மற்றும் நிலக்கடலை பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதனால் அருகில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டையை பார்வையிட்டு அந்த பண்ணை குட்டையின் பயன்பாட்டினை சம்பந்தப்பட்ட விவசாயிடம் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் அல்லிராணி வேளாண்மை துணை இயக்குனர் வணிகம் முருகப்பன் தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தர்ராஜன் விதை சான்று அளிப்பு மற்றும் உயிர் மச்சான்று உதவி இயக்குனர் கலைச்செல்வி கார்ட் வேளாண்மை அறிவியல் நிலைய இயக்குனர் குமரன் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் வேளாண்மை அலுவலர் நவநீதன் துணை வேளாண்மை அலுவலர் முத்துசாமி ஆகியோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர் இந்த வயல் ஆய்வுக்கான ஏற்பாட்டினை விளாத்திகுளம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் அவர்கள் செய்திருந்தார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.