அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் வரும் டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கி வைக்கிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000
வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த புதுமைப்பெண் திட்டம் விரிவாக செயல்பட உள்ளது. ஆகவே தூத்துக்குடியில் வரும் 30-ஆம் தேதி முதல்வர்
மு க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக வங்கியாளர்கள் அரசு அலுவலர்கள் கல்லூரி தொடர்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை வகித்தார் ஜெய்ஸ்ரீ முரளிதரன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ந.பூங்கோதை, தூத்துக்குடி.