இருட்டில் மூழ்கியுள்ள கடைவீதி மற்றும் பிற இடங்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை கடைவீதி பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு மற்றும் இதர தெரு விளக்குகள் எரிவதில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் காந்தி சிலை அருகாமையில் மார்க்கெட் பகுதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் பிற இடங்களில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் சரிவர எரிவதில்லை. வால்பாறை நகராட்சி மின்விளக்கு அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு டென்டெர் விடப்பட்டு சரி செய்வதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று பல நாட்களாகவும் கூறி வருகின்றனர். நேற்று இரவு உயர் மின் கோபுர விளக்குகள் எரியாமல்  சிறுத்தை,புலி,காட்டுப்பன்றி,கரடி போன்ற வனவிலங்குகள் எஸ்டேட் பகுதிகளில் தினசரி வந்து செல்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp