புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோ ட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் குறித்து பயிற்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாரதிதாசன் செய்திருந்தார் . பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போக்சோ, குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர் சீனிவாச ராகவன், பட்டதாரி ஆசிரியர் விக்ரமாதித்த பூபதி ஆசிரியர் பயிற்றுநர் செல்லதுரை குழந்தை பாதுகாப்பு நல பணியாளர் மதியழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.