கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் வசித்து வரும் செல்வக்குமாரின் தாயார் ஜெயந்தி வயது 82 இன்று காலை 11 மணி அளவில் வெந்நீர் காய வைக்க சென்ற பொழுது எதிர்பாராமல் மண்ணெண்ணெய் கேன் தவறி விழுந்ததில் தீ மேலே பட்டு எரிய ஆரம்பித்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அலறல் சத்தத்தை கேட்ட அருகாமையில் உள்ள நமிதா என்பவர் உடனே வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அவரால் முடியாமல் அந்தப் பெண் கூச்சலிட்டதினால் அருகாமையில் உள்ள பொதுமக்கள் அவரை 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
பின்பு அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.