கோவையில் காட்டு யானைகள் அட்டகாசம்..!!பொதுமக்கள் பீதி!!!

கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதினால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், தடாகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதினால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கோவை தடாகம் பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை புகுந்து இரும்பு கேட்டை தள்ளி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று அட்டகாசம் செய்து வருகின்றன மேலும் காட்டு யானைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு வளர்க்கப்படும் பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை ருசிக்கின்றன இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் மேலும் காட்டு யானைகள், கருஞ்சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

காட்டு யானைகளை பொதுமக்கள் கண்டால் அதனை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டாம் காட்டு யானைகள் ஆக்ரோஷமாக பொதுமக்களை அவ்வப்போது துரத்தும் நிலையில் காட்டு யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் ஊழியர்களின் வீடுகளை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருவதால் அச்சத்துடன் வசிக்கும் சூழல் உள்ளதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் அதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp