பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை முடிஸ்க்கு நல்ல காத்து பகுதியிலிருந்து  சோலையார் எஸ்டேட் வரை செல்லும் சாலை கான்க்ரீட் சாலையாக மாற்றப்பட்டது. நல்ல காத்து ஆரம்ப மேல் நிலைப்பள்ளி வரையும் சோலையார் சுங்க பாலம் வரையும் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நடுவே உள்ள சுமார் 15 அடி அளவில் சாலையை அமைக்காமல் நடுவில் வாய்க்கால் போல் குழியாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் அரசு பஸ், லாரிகள் வரும் பொழுது வாகனங்கள் பழுது ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் வருவோர் அப்பகுதியில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது. அப்பகுதி சாலை அமைத்த சில நாட்களிலேயே தோணி முடி இரண்டாம் பிரிவு சேர்ந்த ராமானுஜம் அவருடைய மனைவி விமலா வயது 48 ஆகியோர் அவர்களது இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்கள்ளானார்கள்.

அதற்குப்பின் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர்களுக்கு விபத்துக்கள் ஆகிக் கொண்டே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், சாலையில் உள்ள பழுதான இடங்களை சரி செய்து தரவேண்டும்,எதிரே வரும் வாகனங்கள் வருவதை தெரிவதில்லை இதனால் சாலையில் உள்ள வளைவுகளில் வைக்கக்கூடிய வளைவு போடு ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், அரசு பஸ் ஓட்டுனர்கள் கோரிக்கைவைக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேற்றினால் விபத்துக்களை தடுக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp