
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள கவரக்கல், வாட்டர் பால், ஐயர் பாடி ஆகிய பகுதிகள் பனிமூட்டமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள சோலார் மின்விளக்குகள்,சாலையில் ட்ரிபிள் எக்ஸ் ஸ்டிக்கர்கள் இருந்தும் பயனில்லை. சாலை அமைப்பு அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் சாலையில் வழித்தடங்கள் தெரியாமல் தவிக்கின்றனர். இதனை கருத்தில்க் கொண்டு வால்பாறை வட்டார பகுதியில் உள்ள சோலார் மின் விளக்குகள், ஸ்டிக்கர்கள் சரி செய்தால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.












