
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உப்பு தொழிலாளர்கள் மீன் தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர்கள் வளம் பெற வேண்டும்
அரசு என்ன செய்ய வேண்டும்? தொழில் செய்யும் ஆண் பெண் தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்க வேண்டும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திய உப்பு
இலாகாவிற்கு சொந்தமான இடம், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம், புஞ்சை தரிசு நிலம், மானாவாரி விவசாய நிலம், நீர் பிடிப்பு நிலம், அனாதீனம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அங்கே தொழில் செய்யும் உப்பு தொழிலாளர்கள் மீன் கடல் தொழிலாளர்கள் ,விவசாய தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க வேண்டும்,
கப்பல் கட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தொழில் செய்யும் தனியார் முதலாளிகளுக்கும் அரசு நிலங்களை வழங்க கூடாது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழ அரசடி பஞ்சாயத்தில் சுமார் 1000 ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் புஞ்சை தரிசு நிலங்கள், ரயத்துவாரி இடம், அனாதினம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் தனியார் முதலாளிகள் அரசுக்கு ஒரு ரூபாய் கூட கட்டுக்குத்தகை வழங்காமல் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள் இதே போல் தூத்துக்குடி முள்ளக்காடு முத்தையாபுரம் ஃபுல்லா வழி ஆறுமுகநேரி, காயல் பட்டினம் புன்ன காயல்,போன்ற பகுதியில் இந்திய உப்பு இலகாவிற்கு பாத்தியப்பட்ட சுமார் 3000 ஏக்கர் அரசு நிலங்களை அந்த பகுதியில் உள்ள தனியார் முதலாளிகள் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து அரசுக்கு எந்த வகையிலும் கட்டுக்குத்தகை கொடுக்காமல் கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதித்து வருகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும்,
எனவே இந்த பகுதியில் உப்பு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு, மீன் கருவாடு உலர்த்தும் மீனவர் தொழிலாளர்களுக்கு, விவசாய தொழில் செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு அரசு இரண்டு ஏக்கர் விதம் பிரித்து இலவசமாக பட்டா வழங்கினால் அந்த தொழிலாளர்களுடைய வாழ்க்கை வளம் பெறும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்
இதை தமிழக அரசு தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் தற்போது இந்த நிலங்களை கப்பல் கட்டும் தொழிற்சாலைகளுக்கோ அல்லது தூத்துக்குடியில் உள்ள தனியார் முதலாளிகளுக்கோ வழங்கினால் முதலாளிகள் மட்டுமே பயனடைவார்கள் தொழிலாளர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடைபெறாது எனவே
தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு நிலங்களை வழங்க வேண்டும், இவன் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் அகில இந்திய மீனவர் சங்கம் அண்டன் கோமஸ் சாமு காந்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











