
தூத்துக்குடியில் BMC பள்ளியில் சிந்தனை சிற்பி என்ற பள்ளி மாணவ மாணவியருக்கான அறிவியல் ஹேக் கத்தான் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட எம் பி கனிமொழி பேசுகையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறேன். மாணவர்களாகிய உங்களுக்கு ஊக்கத்தை அளிக்க கூடிய வகையில் இருக்கின்ற இந்நிகழ்ச்சி எங்களுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கையை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குறிப்பாக இந்த வளாகத்தில் மாணவ மாணவியர் உருவாக்கியுள்ள படைப்புகளை காட்சி படுத்தி இருந்தார்கள் அவர்களுடன் உரையாடலை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு சமூகத்தின் மீது இருந்த அக்கறை வியப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது குறிப்பாக வயநாடு திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுநிலச்சரிவு ஏற்படும் போது அங்குள்ள மக்கள் மற்றும் மிருகங்களை காப்பாற்றும் விதமாக எச்சரிக்கை ஏற்படுத்துகின்ற பொழுது அவற்றை பாதுகாக்க முடியும் என்ற வகையில் செயல்முறை விளக்கங்களை செய்து வைத்திருந்தனர். மேலும் மழையால் மட்டும் நிலச்சரிவு ஏற்படுவதில்லை நிலநடுக்கங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களாலும் நிலச்சரிவு ஏற்படும் ஆகையால் எதிர்காலத்தில் அது போன்ற நிலை ஏற்படும்போது ஜிபிஎஸ் வைத்து கண்காணித்து அந்த சூழ்நிலைக்கும் நம்மை தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக விளக்கங்களை மாணவர்கள் அளித்தார்கள். ஆகையால் மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
மேலும் விவசாயத்தில் பயிர்கள்விலங்குகளினால் அளிக்கப்படுவது தண்ணீர் வீணாக செல்லக்கூடிய சூழ்நிலை இருப்பது உள்ளிட்டவற்றை கணக்கிட்டு விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏதுவாக மாதிரியிணை உருவாக்கி வைத்திருந்தார்கள் ஓராண்டுக்கு மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகின்ற ட்யூப் லைட்டுகளை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்துவது குறித்த சிந்தனையுடன் மாதிரியிணை உருவாக்கி இருந்தார்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கக் கூடியவர்கள் சமூக அக்கறையுடன் இருக்கின்றவர்களும் உள்ளனர் ஆகையால் நீங்கள் செய்து இருக்கின்ற மாதிரிகளை உலகத்திற்கு முன்னெடுத்து செல்ல வேண்டும் நீங்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் உருவாக்கி இருக்கிறீர்களோ மக்களும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும் தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்கும் பொருட்களை மாதிரியாக காண்பித்து உள்ளீர்கள்.
மேலும் மரங்களை வெட்டுவதற்கு பதிலாக வாழைநார்கள் மூலம் காகிதம் அட்டை உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்வது குறித்து மாணவர்கள் வைத்திருந்தனர் இவ்வளவு சிந்தனைகள் இருக்கின்ற மாணவர்களாகிய உங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் ஆகவே நம்பிக்கையுடன் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் மாணவர்கள் முதலீட்டை எதிர்பார்க்காமல் சமூக வலைதளங்களின் வாயிலாக வாய்ப்பை பயன் படுத்துகின்ற பொழுது யாராவது பொருட்களை வாங்குவதற்கு முன் வருவார்கள் ஆகவே இன்றைக்கு பல்வேறு தொழில்நுட்பங்களுடன் உலகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது அந்த நம்பிக்கையுடன் உங்களது சிந்தனைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் மேலும் போட்டிகளில் பங்கேற்றதுடன் நின்று விடாமல் அறிவியலாளர்களாக தொழில் முனைவோர்களாக இந்த உலகத்தை மாற்றக்கூடியவர்களாக வரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கியிருக்கின்றார்கள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணிபாலா.









