
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில், ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ( RO ) கட்டி முடிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று இதனை மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், வேலாயுதபுரம் தொழிலதிபர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். வேலாயுதபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் ஜோதி சுப்புராஜ் முன்னிலை வகித்தார்,கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர் சாலமன், வேலாயுதபுரம் திமுக பிரதிநிதிபால்சாமி, கரடிகுளம்தொழிலதிபர் ராஜா,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன் மற்றும் ஏராளமானபொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான வரவேற்புஏற்பாடுகளை கயத்தாறு மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஜெய்சங்கர் சிறப்பாக செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











