37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் : 26.08.2025

மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியை திருடிய பணியாளர் கைது – 37.3 சவரன் தங்ககட்டி மீட்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 23.08.2025 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட WGC ரோட்டில் உள்ள ஒரு கோல்ட் டெஸ்டிங் கடையில் உள்ள 37.3 சவரன் தங்க கட்டி காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து மேற்படி கடையின் உரிமையாளரான தூத்துக்குடி WGC ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் விகாஸ் சிண்டே (46) என்பவர் நேற்று அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி கடையில் பணிபுரிந்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு சித்திக் மகன் விட்டால் சிங்கதே (29) என்பவர் கடையில் இருந்த தங்க கட்டியை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரி விட்டால் சிங்கதே என்பவரை இன்று கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட 37.3 சவரன் தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts