வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே K. சுந்தரேஸ்வராபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் கோவிலில் இன்று புனராவர்த்தன ஜுர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையொட்டி இன்று காலை 5-30 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, ஸ்ரீ கணபதி பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புன்யாகாவாசனம், ரக்ஷாபந்தனம், வேதிகாசனை, திரவியாஹீ தி, வஸ்த்ராஹீ தி, பூர்ணாஹித் தீவாதாரணை உள்ளிட்ட பூஜைகள் செய்தப்பின்னர் விசேஷ திரவியங்கள்,பட்டு வஸ்திரங்கள் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைக்குரிய மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து காலை 8 மணியளவில் யாத்திரதானம்,கடம்புறப்பாடு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் காலை 9 மணி அளவில் ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. பின் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது கும்ப அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் K. சுந்தரேஸ்வராபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts