
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 வயது சிறுவன் ஒருவனை வெறிநாய் கடித்ததில் அவனுக்கு ரேபிஸ் (Rabies) நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாய் கடித்ததைச் சிறுவன் ஆரம்பத்தில் யாரிடமும் கூறாமல் அலட்சியப்படுத்தியதால் உடல்நிலை மோசமடைந்தது. கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது அதே சமயம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.











