
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இந்து இசை வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள் தரும் ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் 123 ஆம் ஆண்டு பொங்கல் விழா புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சக்தியான பூமாரி அம்பிகைக்கு பொதுமக்களும் திரளாக வருகை தந்து கோவில் கொடை விழாவில் காப்பு கட்டி ஆற்றில் இருந்து கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை சூடம் காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மலர்களில் விஸ்வரூப அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்த அம்மனுக்கு சங்கீத கீர்த்தியுடன் புஷ்பாஞ்சலி வெகு சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அம்மன் வரலாறு வில்லுப்பாட்டு நடைபெற்றது பின் அடுத்த நாள் பாரதி பட்டிமன்ற குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றமும் நடைபெற்றது இந்ந இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பிரசாதம் பெற்று இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது வெகு விமர்சையாக விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் லெனின் கார்த்திகேயன் சுந்தர் விஜய் முருகன் ராஜன் துரைச்சாமி ராஜா கோவில் அர்ச்சகர்கள் சரவணன் சிவம் மற்றும் சிறப்பு அர்ச்சகர் சங்கர் கணேஷ் கலந்துகொண்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கி சிறப்பித்தார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












