
தூத்துக்குடி முத்தையாபுரம் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கருத்தரங்கில் கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜோஸ் சசிகுமார் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் உயிர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், ஆர்டிஓ பாத்திமா பெர்வின், போக்குவரத்து துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.
மேலும் போக்குவரத்து சம்பந்தமான விளைவுகள் அதிலிருந்து மாணவர்கள் விலகி வந்து வாழ்வியல் முறைகளையும் பற்றியும் மாணவர்களுக்கு மாவட்ட சட்டபணிகள் ஆணைக் குழுவினர் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சுதர்சன், ராஜா விரிவாக வழங்கினார்கள். கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் போக்குவரத்து விதிமுறைகளையும், விபத்து பற்றியும் கற்றிந்தனர். நிகழ்ச்சியை கல்லூரி விரிவுரையாளர்கள் வழி நடத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











