​பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கே. நித்தியானந்தனுக்கு முதலுதவி சமூக நல அறக்கட்டளை நேரில் வாழ்த்து!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் மக்கள் பேராதரவோடு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் கே. நித்தியானந்தன் அவர்களுக்கு முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் நேரில் சந்தித்து சிறப்பான முறையில் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடந்து முடிந்தநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள கே. நித்தியானந்தன் அவர்களை அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் அவர் ஆற்றவிருக்கும் மக்கள் பணிகளுக்கு அறக்கட்டளையின் சார்பாக முழு ஒத்துழைப்பும் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் இச்சந்திப்பின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள கே. நித்தியானந்தன் அவர்களை அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் அவர் ஆற்றவிருக்கும் மக்கள் பணிகளுக்கு அறக்கட்டளையின் சார்பாக முழு ஒத்துழைப்பும், மனமார்ந்த நல்வாழ்த்துகளும் இச்சந்திப்பின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்தச் சிறப்புமிக்க வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர். அபு.இக்பால் தலைமை தாங்கினார். மேலும் மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, இளைஞர் அணிச் செயலாளர் அப்பாஸ் மற்றும் மாநில நிர்வாகிகளான சந்தோஷ், ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்து சட்டமன்ற உறுப்பினருக்குப் பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts