மாஸ்க் கட்டாயமில்லை அறிவித்த அடுத்த மாநிலம். டில்லியும் மகாராஷ்டிராவும் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்தநிலையில், தற்போது ஹரியானா அரசும் இதே உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் முக கவசம் அணிவது சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டன. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
-நிருபர்கள் குழு.