உள்ளூர்விற்பனையாளர்கள் அனைத்து முறைகளிலும் விற்பனையளாராக மிகவும் குறுகிய இடத்தில் உள்ள சந்தை· எளிதாகபயன்படுத்தும் வகையிலான டிஜிட்டல் ஸ்டோர் ஆகவும், செயற்கைநுண்ணறிவு கருவி கொண்டுதடையற்ற டிஜிட்டல் முறை மற்றும் தேவைகளை அறிவதோடு, விலையையும் அறிய முடியும். ஜிங்கிள்பிட்-ன் இலக்கு, ஆப்லைன் விற்பனையாளர்களுக்குஎதிர்காலத்திற்கு உதவும் வகையில் தயார்படுத்த, டிஜிட்டல்மையமாக்குதலாகும். அவர்களதுகையிருப்பையும்,ஆன்லைனில்அதிகம் இடம் பெறவும் வாய்ப்பளிப்பது ஆகும். வாங்வோருக்கு, கடையில் உள்ள அனைத்து பொருட்களின்விலையையும் அறிய தளத்தை ஏற்படுத்தி, இந்திய கடைகளில் ஒருமாற்றத்தை ஏற்படுத்துகிறது ஜிங்கிள்பிட்.ஜிங்கிள்பிட், மே 2020ல் சென்னையில்துவக்கப்பட்டது.
கிருஷ்ணன் நாரணப்பட்டி, சுதர்ஷன்பாபு, வெங்கடேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீவாஸ்அனந்தராமன் ஆகியோர் இணைந்து துவங்கினர்.தற்போதுஇந்த செயலியை 4 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 4000 விற்பனையாளர்கள் உள்ளனர்.பிளேஸ்டோரில் முதல் 100 செயலிகளில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விநியோகவசதியை கொண்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்துஏஞ்சல் முதலீட்டாளர்களை பெற்று $700,000 நிதியைதிரட்டியுள்ளது.
தொற்றுகால பாதிப்பை எதிர்கொண்ட ஜிங்கிள்பிட்,தொற்றுகாலத்தில்வணிகத்தில் ஏற்பட்ட பாதிப்பு,பலஅங்காடிகளுக்கு டிஜிட்டல்மயமாக்குதல் தேவையாக இருந்தது. இத்தகைய உள்ளூர் விற்பனைகுழுக்களுக்கு,எளிதாகவும், விரைவாகவும் மற்றும் சிக்கனமானவழியில் உள்ளூர் இ வணிக அனுபவத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் வணிகர்கள், புதிய டிஜிட்டல் வடிவிலான வணிக உலகைதுவக்க இது வழிகாட்டியது.தமிழ்நாட்டில்சராசரியாக ஒவ்வொரு நாளும் 20 ஆப்லைன் விற்பனையாளர்கள் வெளியேறி வருகின்றனர், இது தினமும் அதிகரித்து வருகிறது.
ஜிங்கிள்பிட்,இவர்கள்தொடர்ந்து நிலைக்க உதவி செய்வதோடு, புதியடிஜிட்டல் காலத்தில் அவரவர் சொந்த பெயரை வலுவாக்குகிறது.ஜிங்கிள்பிட்டில்விற்பனை பொருட்கள்:தற்போது, மொபைல்போன், அதன் உதிரி பாகங்கள், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ், பயன்பாட்டு பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி உதிரிபாகங்களாகும். சமீபத்தில் வாகன பராமரிப்புபொருட்கள் மற்றும் வாழ்வியல் தயாரிப்புகள் போன்றவைகளையும் இணைத்துள்ளன.500க்கும் மேற்பட்ட பொருட்கள் ஜிங்கிள் பிட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
ஜிங்கிள்பிட்சென்னையை மையமாக வைத்துச் செயல்பட்டாலும், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில்சேவையாற்றி வருகிறது. கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் தேவை அதிகரித்துவருகிறது. உள்ளூர் இ வணிக விற்பனையை திறம்பட ஏற்படுத்தி, இரண்டாம் நிலை நகரங்களில்நுழைந்துள்ளது.தற்போது, கோவையில் வசிப்போர் சிறப்பானவிலையில், விரைவாக பொருட்களை இ வணிகமுறையில் பெற முடியும். உள்ளூரில் விரைவாக வாங்கும் அனுபவத்தை பெற முடியும்.ஜிங்கிள்பிட்ஸ் விற்பனையாளர்கள்: ஜிங்கிள்பிட், விற்பனையாளர்கள் நல்வாழ்வை இலக்காககொண்டுள்ளது. தனித்துவமிக்க அணுகுமுறையால் சென்னையில் உள்ள பல சிறுவிற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையை கோவையிலும் ஏற்படுத்தவுள்ளது.
ஜிங்கிள்பிட்உடன் பங்குதாரராக மாறிய பல சென்னையை சேர்ந்த விற்பனையாளர்கள், தங்களது மாதாந்திர விற்பனையில் 30%உயர்வு பெற்றுள்ளனர். தொற்றுக்கு பின் சில்லறை விற்பனையில் ஏற்பட்ட மாற்றம் இது. ஜிங்கிள்பிட் புதிய சிப் விரைவு திட்டம்
அமெரிக்காவைஅடிப்படையாகக் கொண்ட ஆஸ்டின்,ஜிங்கிள்பிட் ஐ, அதன் புதிய சிப் விரைவு திட்டத்தால்ஒரு வளமான ஸ்டார்ட் அப் ஆக தேர்வு செய்துள்ளது. இந்த திட்டம் நிறுவனரால்துவங்கப்பட்டுள்ளது. பங்குதாரர் இல்லாத, ஒருஸ்டார்ட் அப் தொடரின் முதல் துவக்கமாக, வணிகத்தைஅடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக இருக்கும்.
– சீனி,போத்தனூர்.