முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ண்ணார்பேட்டையில் இருக்கும் திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு நெல்லை செய்தியாளர்,
-அன்சாரி.