தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செண்பகராஜ் (26) என்பவர் தனது வீட்டில் இன்று அதிகாலை குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிய சத்தம் கேட்டு செண்பகராஜ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த தனது செல்போன் திருடு போனது மற்றும் வீட்டின் வெளிக் கதவு உடைக்கப்பட்டிருந்தது செண்பகராஜுக்கு தெரியவந்துள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து செண்பகராஜ் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் எப்போதும்வென்றான் நடுதெருவைச் சேர்ந்த தேன்ராஜ் மகன் கனகராஜ் (27) திருடியது தெரிய வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரபாண்டியன், கனகராஜை கைது செய்து அவரிடமிருந்த திருடபட்ட ரூ.14, 000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார். மேலும் கனகராஜ் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.