கொட்டும் மழையில் காத்திருக்கும் மாணவ மாணவியர்கள்! பேருந்துகள் இல்லாததால் பரிதவிப்பு!!

கோவை மாவட்டம் சிறுவாணி செல்லும் சாலையில் மாதம்பட்டி அடுத்துள்ள ஆலந்துறையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று மாலை இந்தப் பகுதியில் கனமழை பெய்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த நேரத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துக்காக மிக நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எந்த பேருந்தும் வரவில்லை.

இது பற்றி அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரிக்கும் பொழுது பேருந்துகள் குறைவாக இருப்பதினால் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை என்று மாணவன் மாணவிகள் தவிக்கிறார்கள்.

எனவே பேருந்து வசதிகளை அதிகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-A.பழனி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp