சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணைமின்நிலையங்களில் எதிர்வரும் 08.08.2022 திங்கட்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சிங்கம்புணரி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி,
கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு பகுதிகளிலும் அ.காளாப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் S.V.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும், அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.