மண் சோறு சாப்பிட வந்த பெண்ணால் மருதமலையில் பரபரப்பு!

மருதமலையில் இந்து கடவுள்களை பற்றி இழிவான கருத்துக்களை இணையதளம் வாயிலாக பரப்பி வருபவர்களை கண்டித்து, மண் சோறு சாப்பிட வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை, சொக்கம்புதுரை சேர்ந்தவர் சரஸ்வதி, 47. இவர், சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவியாக உள்ளார். இந்நிலையில், நேற்று பகல் சரஸ்வதி தனியாக மருதமலை அடிவாரம் வந்தார்.

அங்கு இந்து கடவுள்களை பற்றி இழிவுபடுத்தி, இணையதளம் வாயிலாக பரப்பி வருபவர்களை கண்டித்து, மண் சோறு சாப்பிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்து, பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சரஸ்வதியை தடுத்து நிறுத்தினர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்து சென்ற போலீசார், அனுமதி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, எச்சரித்தனர். இதையடுத்து, சரஸ்வதி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனால், மருதமலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp