அறப்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துவோம்!

1888, செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்த சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியும், ஆசிரியருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கருவிலே கற்றுத்தரும் அன்னையாய்
கரம்பிடித்து வழிநடத்தும் தந்தையாய்
மாணவர் அகஇருள் நீக்கி
அறிவொளி ஏற்றி ஆளாக்கி, அவர்களுக்கு
உலகை உணர்த்திய ஆசிரியப் பெருமக்களின் பணி வார்த்தைகளில் அடங்காத அறப்பணியாகும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
மாணவர்கள் ஞானம் பெற நாள் தோறும்
தாமே மாணவராய் மாறி
கற்றுத் தெளிந்து கற்பித்து
தன்னிலும் உயரிய நிலையடையும்
தம் மாணவர்களைக் கண்டு
பெருமிதம் கொள்ளும் நல்லாசிரியப் பெருமக்களை நாமும் நன்றியுடன்
வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!

நல்வாழ்த்துடன்,
-சோலை. ஜெய்க்குமார் / Ln. இந்திராதேவி முருகேசன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp