எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் செயல்படும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திட்டத்தின்கீழ் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான வளரறி மதிப்பீடு ‘எண்ணும் எழுத்தும்’ செயலி மூலம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தொகுத்தறி மதிப்பீடு செய்ய அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 19 முதல், 30ம் தேதி வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, தொடக்க கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:இந்த மதிப்பீடு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ‘எண்ணும் எழுத்தும்’ செயலி மூலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புக்கு ‘பிரின்ட் அவுட்’ முறையில் தேர்வு நடக்கிறது. மாணவர் வருகை, ஆசிரியர் வருகை, ‘எமிஸ்’ பதிவேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் டிஜிட்டல் மொபைல் செயலி மூலம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது தொகுத்தறி மதிப்பீட்டையும் மொபைல் போனில் மேற்கொள்ளும் பட்சத்தில் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடும்.
இதற்கென பிரத்யேக மொபைல் டேப்லெட் இருந்தால் கையாள எளிமையாக இருக்கும். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் இதற்கான ஏற்பாடுகள் செய்தால் உபயோகமாக இருக்கும்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொரோனோ காலத்தில் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாக கற்றல் வாய்ப்புகளை மாணவர்கள் இழந்ததாக கூறப்படுகிறது. இதனை மீண்டும் ஈடு கட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கொண்டு வரப்பட்டது.தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில், மொபைல் செயலியில் தேர்வு எழுதுவதை காட்டிலும் எழுத்து பூர்வமாக தேர்வை எழுத வைத்தால் எழுத்துப்பயிற்சி அளித்ததாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.