சந்துக்கு சந்து இனி பணம் கொட்ட போகுது! வங்கிகளின் அதிரடி திட்டம்! அப்போ தொல்லையே இல்ல!!

இனி எல்லா பகுதிகளிலும் பொதுமக்கள் எளிதாக பணம் எடுக்கும் வகையில் அதிகமான ஏடிஎம்களை அமைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. உலகில் வாழும் மக்கள் அனைவரும் காலத்திற்கு ஏற்ப மாறுவது போன்று நம் செய்யும் வேலைகளும் மாறி வருகின்றன.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது நாம் செய்யும் எல்லா வேலைகளையும் இணையத்தின் மூலமாகவே செய்து வந்தாலும், அதிகமான மக்கள் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைத்து வங்கிகளும் அதிகமான ஏடிஎம் இயந்திரங்களை அமைத்த வண்ணம் உள்ளது.

கடந்த இரண்டு வருடமாக கொரோனாவின் தாக்கம் இருந்ததால் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்படுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. தற்போது 2.17 லட்சம் ஏடிஎம்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் அதிகமாக ஏடிஎம் இயந்திரம் அமைக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.

இது போக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா போன்ற திட்டங்களுக்கான நிதியுதவி வங்கிகளில் நேரடியாக வழங்கப்படுவதால் கிராமப்புறங்களில் அதிகமாக ஏடிஎம் இயந்திரம் அமைக்கப் படவேண்டும் என வங்கிகள் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக 6750 ஏடிஎம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பணம் எடுப்பதில் நிலவும் சிக்கல் குறைய உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.சிவகுமார், சிந்தாரிப்பேட்டை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp