கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள இயற்கை எழிலை கொண்ட மூணார் பகுதியில் தென் மேற்கு பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சின்னகானல் பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சி தனி சிறப்பு பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியில் நின்று புகைப்படம் எடுக்காமல் செல்வதில்லை.
தற்போது மழை குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காணக்கிடைக்காத வகையில் இந்த நீர்வீழ்ச்சி வெள்ளியை கரைத்து ஊற்றியது போலவும் இரண்டு பக்கமும் பசுமை நிறைந்த காடுகளும் சூழ மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
அனைத்து சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் வந்து ரசித்து செல்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.