பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 15வது சீசன் நடக்கிறது. துபாயில் நடக்கும் ‘சூப்பர்-4’ சுற்றுக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா (28), லோகேஷ் ராகுல் (28) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சூர்யகுமார் யாதவ் (13), ரிஷாப் பன்ட் (14) சோபிக்கவில்லை.
ஹர்திக் பாண்ட்யா ‘டக்-அவுட்’ ஆனார். அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார். தீபக் ஹூடா (16) ஆறுதல் தந்தார். கோஹ்லி (60) ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக அபாரமாக ஆடிய முகமது ரிஸ்வான் (71) அரைசதம் கடந்தார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.