கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மிக முக்கியமான குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணார் சுற்றுலாத் தளத்திற்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லுகின்றனர். சீசன் நேரங்களிலும் கோடை காலங்களிலும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் போது பல சுற்றுலா பயணிகள் படகு சவாரி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடமுடியாமல் ஏமாற்றத்துடன் கடந்து செல்கின்றனர்.படகு மற்றும் பரிசல் சவாரி மட்டுப்பட்டி,குண்டலை போன்ற பகுதிளில் மட்டும் உள்ளது.
அனைத்து சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதத்தில் தற்போது இடுக்கி மாவட்டம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் பைஜுஷ் டூரிசம் வேர்ல்ட் என்ற நிறுவனமும் இணைந்து பழைய மூணாறில் படகு சவாரி, பரிசல் சவாரி மற்றும் சைக்கிள் சவாரி போன்றவற்றை நேற்று மூணார் சட்ட மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எ.ராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.