ரயில் சேவை ரத்து!!

சூறாவளி காற்று வீசியதில் மரம் தண்டவாளத்தில் விழுந்ததால் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஊட்டி இரண்டாவது சீசன் துவங்கியதும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரயில் முன்பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் கேத்தி லவ்டேல் இடையே கற்பூர மரம் வேரோடு சாய்ந்து விழந்தது. இதனால் குன்னூர் ஊட்டி இடையிலான ரயில் போக்குவரத்து பதிக்கப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீலகிரி மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சீரமைப்பு பணிகள் முடிந்ததும் 13-09-2022 இன்று போக்குவரத்து துவங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

-செய்யத் காதர், குறிச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp