வ. உ. சியின் கொள்ளுப்பேத்தி செல்வி நாளைய வரலாறு செய்திகளுக்காக பேசுகையில் வ. உ. சியின் 151வது பிறந்தநாளை தமிழக அரசு மற்றும் எதிர் காட்சி அதிமுக வெகு சிறப்பாக கொண்டாடியது, கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்று வாகனம் நிராகரிக்கப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த சில ஆண்டுகளாக தென்னகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது, புறக்கணிக்கப் படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் வ. உ. சி யின் வெண்கல சிலை நிறுவ வேண்டும், நாடாளுமன்ற நுழைவாயிலில் ஒன்றுக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் நினைவு மண்டபங்களை பராமரித்து சிறப்பாக விழா நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ. ஏ. நாராயணசாமி கூறுகையில் வ. உ.சியின் நேரடி வாரிசுகள் புறக்கணிக்கப்பட்ட வருவதாகவும், சமீபத்தில் கூட தமிழக ஆளுநர் ரவி நடத்தி நிகழ்ச்சியில் நேரடி வாரிசுகள் அழைக்கப்படவில்லை என்றும், இது வேதனை அளிக்கும் நிகழ்வு என்றும், வ. உ. சியின் நேரடி வாரிசுகளை அழைத்து கவுரவ படுத்த வேண்டும் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.