உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவையில் பி.பி.ஜி.ஆப்தோமெட்டரி கல்லூரி மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண் நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வியாழக்கிழமை கடைபிடிக்கபடுகிறது.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக பார்வை தினத்தை முன்னிட்டு, பிபிஜி, ஆப்தோமெட்டரி கல்லூரி மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பாக துவங்கப்பட்ட இந்த பேரணியை , பிபிஜி அப்டோமெட்ரி கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா, அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ்,ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பொதுமக்களுக்கு கண்பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள், கண் பார்வை குறி்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர் எஸ் புரம் பகுதியில் ஊர்வலமாக சென்றனர். இது குறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் அருணா பிரகாஷ் ,கூறுகையில், கூறுகையில், நமது உடலின் மற்ற பாகங்களை நாம் பாதுகாப்பது, போன்று கண்களையும் பாதுகாக்க வேண்டும்,
கண்களில் நீர் வடிதல், கண்களில் பார்வை குறைபாடு, தூசி படுதல் போன்ற குறைபாடுகளை தகுந்த கண் மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.பி.ஜி.ஆப்தோமட்டரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா,கண் தொடர்பான நோய்கள் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியை நடத்துவதாக குறிப்பிட்டார்.இதன் துவக்க நிகழ்ச்சியில், , பிபிஜி மேலாண்மை கல்லூரி முதல்வர் டாக்டர் வித்யா, பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யசீலன்,மற்றும், டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆதித்யா, சாந்தனு சக்ரவர்த்தி, இந்து மதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.