கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க கடம்பூர் ராஜி அவர்கள் போர்க்கொடி!!!

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதியிலுள்ள நீண்ட நாள்களாக தீர்க்கப்படாத குறைகளைக் 10 கோரிக்கைளை மனுவாக அளிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜி அவர்கள். எதிர் காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அனுமதி பெற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். அதில் முதல் கோரிக்கை கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்.

கோரிக்கை மனு உள்ள செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதிகள் மற்றும் 1 பாராளுமன்ற தொகுதி 10 வட்டங்கள் 3 கோட்டம் உள்ளது. மேலும் புதிதாக ஒரு கோட்டம் விளாத்திகுளத்தில் உருவாக்கிட வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் தாலுகாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் , கோவில்பட்டி சுற்றி சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் இனணத்து புதிதாக ஒரு மாவட்டம் கோவில்பட்டியை தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்டால் சுமார் 20 லட்சம் மக்களுக்கு நல்ல நிர்வாக வசதி மற்றும் சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி 2வது பெரிய நகரமாக விளங்குகிறது . இப் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்குகின்றன . கல்வி நிலையங்கள் அதிகம் உள்ளது. கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் , மாவட்ட தலைமை மருத்துவமனை , செயற்கை புல்வெளி மைதானங்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்கநாற்கர சாலையில் கோவில்பட்டி அமைந்துள்ளது. மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் தரும் இரயில் நிலையங்களில் கோவில்பட்டி இரயில் நிலையம் 2ம் இடத்தில் உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் எடப்பாடி அடுத்து கோவில்பட்டி தொகுதி கவனம் பெற்றிருக்கிறது. காரணம் கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், கடம்பூர் ராஜி அவர்களைக் எதிர்த்து போட்டியிட்டார்.

கடம்பூர் ராஜி அவர்கள் 2011 முதல் 2016 வரை சட்ட மன்ற உறுப்பினராகவும், 2016 முதல் 2021 வரை அமைச்சராகவும், தற்போது 2021 வரை தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார். இவரை கோவில்பட்டி தொகுதி மக்கள் நலத்திட்ட நாயகன் என்று அழைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp