தனியார் டைல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.30,000 அபராதம்!! நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்ற ஆணையம் உத்தரவு!!

சேவைக் குறைபாடு காரணமாக தனியார் டைல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாகர்கோவிலைச் சார்ந்த ராக்கேஸ் என்பவர் நாகர்கோவில் பீச் ரோடு ஜங்சனிலுள்ள தனியார் டைல்ஸ் மார்ட்டிடம் ரூ.31,752 செலுத்தி 504 சதுரடி டைல்ஸ் வாங்கியுள்ளார். வாங்கிய நான்கு மாதங்களிலேயே அந்த டைல்ஸின் உள் பகுதியில் ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடைக்காரரை தொடர்பு கொண்டு டைல்ஸ்களை மாற்றித் தருமாறு பாதிக்கப்பட்ட நுகர்வோர் கேட்டுள்ளார். ஆனால் டைல்ஸ் மார்ட் நிறுவனம் மாற்றித் தராமல் இழுத்தடித்துள்ளது. உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் டைல்ஸ் மார்ட் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.25,000, டைல்ஸ்க்கு செலுத்திய ரூ.31,752 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp