பொள்ளாச்சி நேதாஜி சாலையில் வசிப்பவர் மைதீன், 20. இவர் கடந்த, 2020 நவ 10ம் தேதி, 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.இதை விசாரித்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் மைதீனை கைது செய்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மைதீன் மீதான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, குற்றம் சாட்டப்பட்ட மைதீனுக்கு, அத்துமீறி நுழைதல் குற்றத்துக்கு இந்திய தண்டனை சட்டத்தின், 450ம் சட்டப்பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
மூதாட்டியை துன்புறுத்திய குற்றத்துக்கு, 354ம் சட்டப்பிரிவின்படி, இரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலத்தை, மைதீன் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.