ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் சென்னையில் தயாரிக்க ஒப்பந்தம்!!

சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ ரெயில் 2024 – ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன்.வ.வடசென்னை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp